உலகின் அனைத்து நாடுகளையும் ஒன்றிணைக்கும் சக்தி ஒலிம்பிக் போட்டிக்கு மட்டுமே உண்டு.

கடைசியாக 2016-ம் ஆண்டில் பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் ஒலிம்பிக் போட்டி நடைப்பெற்றது. இந்த நிலையில் 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

இதில் 204 நாடுகளை சேர்ந்த 11,200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். ஒலிம்பிக்கின் கோலாகல தொடக்க விழா டோக்கியோவில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் இலங்கை நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்க இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.