இன்று பிற்பகல் Whakatane மாநில நெடுஞ்சாலை 30 இல் கார் மோதியதில் பாதசாரி ஒருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

மாலை 4.40 மணியளவில் ஒருவர் காரில் மோதுன்டு விபத்துக்குள்ளானதாக தங்களுக்கு அறிவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து விபத்துக்குள்ளான குறித்த நபர் மோசமான நிலையில் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

கடுமையான விபத்து பிரிவு சம்பவ இடத்தை ஆய்வு செய்யும் போது சாலை மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.