வண்ணமயமான ஜெமினிட்ஸ் விண்கல் பொழிவை எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு இலங்கை மக்களுக்கும் கண்டுகளிக்க முடியும் என்று இலங்கை விண்வெளி அறிவியல் திணைக்களத்தின் தலைவர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

 

அதேவேளை 397 வருடங்களுக்கு பின்னர் வியாழன் மற்றும் சனிக்கிரகங்கள் பூமிக்கு மிக நெருக்கமான சுற்றுப்பாதையில் பயணிக்கும் மிக அரிய நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

 

ஜெமினிட்ஸ் விண்கல் பொழிவை எதிர்வரும் 13ம் திகதி இலங்கையர்கள் காணமுடியும் என கொழும்பு பல்கலைக்கழக இயற்பியல் துறையின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் திணைக்களத்தின் தலைவர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

 

டிசம்பர் 13 ஆம் 14 ஆம் திகதிகளில் வருடாந்திர விண்கல் பொழிவு நிகழ்கின்றது. ஆசிய பிராந்தியத்தில் நிலவு ஒளி இல்லாததால் இந்த ஆண்டு அதிகாலை வரை ஏராளமான விண்கற்களைக் காணலாம்.

 

நகரமயமான பகுதிகளில் ஒளி மாசுபாடு இல்லாமல் வானம் தெளிவாகவும், இருட்டாகவும் இருந்தால், ஒரு மணி நேரத்திற்கு 120 விண்கற்கள் அல்லது நிமிடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு விண்கற்கள் காணப்படலாம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

இரவு 9 தொடக்கம் 10 மணிக்குப் பின்னர் கிழக்கு நோக்கி நோக்கிய விண்கற்களை இலங்கையர்கள் காணலாம். ஞாயிற்றுக்கிழமை (13), நள்ளிரவில் மற்றும் திங்கள் (14) சூரிய உதயத்திற்கு முன் விண்கல் பொழிவை காணமுடியும்.

 

திங்களன்று (14) அதிகாலை 2 மணி முதல் அதிகாலை 4.30 மணி வரை சூரிய உதயத்திற்கு முந்தைய இருண்ட நேரங்களில் இதைப் பார்ப்பதற்கான சிறந்த நேரமாக இருக்கும்.

 

ஏனெனில் மழையின் கதிரியக்க புள்ளி வானத்தில் மிக அதிகமாக உள்ளது மற்றும் உச்ச செயல்பாடு ஏற்படுகிறது.


"இந்த விண்கல் மழை வெள்ளை, மஞ்சள், பச்சை, நீலம் மற்றும் சிவப்பு போன்ற பல வண்ணங்களில் காணப்படும் விளக்குகளின் தடத்துடன் பல வண்ண காட்சியாக இருக்கும்.

 

இந்த நட்சத்திரங்கள் ஜெமினி என்ற நட்சத்திர விண்மீன் திசையிலிருந்து வருவதால் இதற்கு ஜெமினிட் என்று பெயரிடப்பட்டுள்ளது,” என்று அவர் கூறியுள்ளார்.

 

அதேவேளை, எதிர்வரும் 14 ஆம் திகதி தென்னமெரிக்காவின் பெரு மற்றும் சிலி ராச்சியங்களுக்கு பூரண சூரிய கிரகணம் தென்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இலங்கை நேரப்படி இந்த சூரிய கிரகணம் இரவு 7.04 அளவில் இடம்பெறும் என்பதுடன், அதன் உச்சகாலம் இரவு 9.40 க்கும் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதனிடையே, மேற்கு வானில் இன்னுமொரு அரிய நிகழ்வு இடம்பெறவுள்ளது. நீண்ட காலத்திற்கு பின்னர் எதிர்வரும் 21 ஆம் திகதி சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் சனிக் கிரகமும், வியாழன் கிரகமும் பூமிக்கு மிக அருகில் உள்ள சுற்றுப்பாதையில் கடந்து செல்லவுள்ளன.

 

சில சமயம் அவை இரண்டும் ஒட்டிய வௌிச்ச பந்து போன்று காட்சியளிக்கக் கூடும்" என்றும் விண்வெளி அறிவியல் திணைக்களத்தின் தலைவர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.