ரோட்டோருவாவின் (Rotorua) தெற்கே வயோட்டாபு ( (Waiotapu) அருகே மாநில நெடுஞ்சாலை 5 இல் (State highway 5) ஏற்பட்ட இரண்டு கார்கள் மோதுன்டு விபத்துக்குள்ளானது.

சம்பவ இடத்தில் மூன்று மீட்பு ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட பொலிஸ் மற்றும் அவசர சேவைகள் மீட்பு பணியில் ஈடுபட்டன.

இன்று இரவு 7.15 மணியளவில் வைகிட் பள்ளத்தாக்கு சாலை மற்றும் வைகரேமோனா சாலை இடையே நேருக்கு நேர் இந்த விபத்து ஏற்பட்டது.

ஒரு போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஒரு காரில் ஐந்து பேரும், மற்றைய காரில் இரண்டு பேரும் இருந்ததை உறுதிப்படுத்தினர்.

தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் குழுவினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

மேலும் மாநில நெடுஞ்சாலை 5 மூடப்பட்டு திசை திருப்பல்கள் நடைபெற்றது.