கொழும்பின் சில பகுதிகளில் இன்று (10) காலை 7 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

 

இந்த வகையில், கொழும்பு 12, 13, 14 மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

 

மேலும் ,இதேநேரம், கொழும்பு ஒன்றில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.