தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் கொவிட் தொற்றுக்குள்ளான தோர் என்ற சிங்கம், குணமடைந்துள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் C.B.ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.

அதேவேளை , மிருகங்களுக்காக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.