ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று சத்திய பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளார்.

இதன்படி ,பாராளுமன்றத்தில் இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில், ரணில் விக்ரமசிங்க சத்திய பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு தேசிய பட்டியல் ஊடாக ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர் பதவி மாத்திரமே கிடைத்திருந்தது.

எனினும், கடந்த 10 மாதங்களாக அந்த பதவிக்கு கட்சி சார்பில் எவரும் பெயரிடப்படாத நிலையில், கட்சியின் செயற்குழுவினால் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.