நியூசிலாந்து நாட்டை சேர்ந்த பளுதூக்கும் திருநங்கை ஒருவர் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.

43 வயதான லாரல் ஹப்பார்ட் பெண்களுக்கான 87 கிலோ எடைப் பிரிவில் போட்டியிடுவார் என்று நியூசிலாந்து ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி எந்தவொரு திருநங்கை விளையாட்டு வீரரும் ஒரு பெண்ணாகப் போட்டியிடலாம் என்ற வழிகாட்டுதல்களை வெளியிட்டதை அடுத்து ஹப்பார்ட் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.