நாட்டில் கொரோனா தொற்றுநோய் ஏற்பட்டுள்ளதால் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான உறுதியான திகதியை கூற முடியாது என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, இணையத்தின் மூலமான கல்வியை தொடர வேண்டும் எனவும் கல்வி அமைச்சர் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சர் இதை தெரிவித்தார்.

மேலும், இணைய வசதியை பெற முடியாத மாணவர்களுக்கு ‘பிராந்திய கற்றல் மையங்கள்’ அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.