சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி தந்த முதலமைச்சர் மு.கஸ்டாலினுக்கு இயக்குனர் பாரதிராஜா நன்றி கூறி கடிதம் எழுதியுள்ளார். முடங்கிக் கிடந்து திரையரங்குகள் இல்லாமல் தவிக்கும் எம் படங்கள் ஒருபுறம். பாதி படப்பிடிப்பை முடித்து மீதி முடிக்க காத்திருக்கும் படங்கள் ஒருபுறம்.என பத்துமாதம் சுமக்க வேண்டிய குழந்தையை இரண்டு வருடங்கள் சுமந்தது போன்ற வலி மறுபுறம் என இருந்த நிலைக்கு உங்கள் அறிவிப்பு பெருமலர்ச்சியைத் தந்திருக்கிறது. படப்பிடிப்பை நடத்திக்கொள்ளத் தந்த அனுமதி எங்களுக்கு மீண்டும் உயிர் பெற்றது போல உள்ளது என பாரதி ராஜா கூறியுள்ளார்.