இலங்கையில் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளதாக கலால் வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டிக்கு அமைய, அனைத்து வர்த்தக நிலையங்களையும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமையினால், கலால் வரித் திணைக்கள அனுமதி உள்ள மதுபானசாலைகளை மாத்திரம் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கலால் வரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க தெரிவிக்கின்றார்.

அந்த விடயம் தொடர்பில் அனைத்து உதவி கலால் வரித் திணைக்கள ஆணையாளர்கள், கலால் வரித் திணைக்கள பணிப்பாளர்கள், கலால் வரித் திணைக்கள பொறுப்பதிகாரிகளுக்கு தெளிவூட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

(F.L 04) அனுமதியுடைய மதுபானசாலைகள் மற்றும் (F.L 22A) அனுமதியுடைய பியர் விற்பனை நிலையங்களை மாத்திரம் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கலால் வரித் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.