இன்று காலை ப்ளென்ஹெய்மில் (Blenheim) நடந்த மோதல் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிகாலை 3.30 மணியளவில் சந்தை வீதியில் நடந்த இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன்  மேலும் இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொலை நோக்கத்துடன் செயற்பட்டமை, தாக்குதல் மற்றும் ஒழுங்கற்ற நடத்தை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டதாக மார்ல்பரோ ஏரியா கமாண்டர் இன்ஸ்பெக்டர் சைமன் ஃபெல்தம் தெரிவித்தார்.

இந்நிலையில் இவர்கள்  நாளை ப்ளென்ஹெய்ம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்த தகவல்கள் உள்ள எவரும் 105 க்கு அழைப்பதன் மூலமும், நிகழ்வு எண் P046918039 அல்லது கோப்பு எண் 210620/6521 ஐ மேற்கோள் காட்டுவதன் ஊடாக போலீசாருக்கு தகவல் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.