இன்று காலை தெற்கு ஆக்லாந்து வழியாக வீசிய சூறாவளியில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

புயல் காலை 8.30 மணியளவில் பாப்பாடோயோட்டோவின் (Papatoetoe) புறநகரில் கூரைகள் மரங்கள்,ஜன்னல்கள், மின் இணைப்புகளை வீழ்த்தியது.

விரி ஸ்டேஷன் சாலையில் (Wiri Station Road) ஒரு சரக்கு கொள்கலன் மையத்தில் சூறாவளி தாக்கியதில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார்.

காயமடைந்த இருவர் மிடில்மோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்

இதற்கிடையில், இன்று காலை சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தெற்கு ஆக்லாந்தில் ஒரு சிவில் பாதுகாப்பு நல மையம் திறக்கப்பட்டுள்ளது.

இது நியூபரி செயின்ட் ஏதாரா பூல் மற்றும் ஓய்வு மையத்தில் (Ōtara Pool and Leisure Centre in Newbury St) அமைக்கப்பட்டுள்ளது.

ஆக்லாந்து முழுவதிலும் இருந்து 20 க்கும் மேற்பட்ட தீயணைப்புப் பணியாளர்கள் தூய்மைப்படுத்தல. பணியில் ஈடுபட்டுள்ளதுடன் ஒரு தீயணைப்பு மற்றும் அவசர கட்டளை பிரிவு சம்பவ இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.