இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள நாடு முழுவதுமான பயணத் தடை திங்கட்கிழமை (21) அதிகாலை 04 மணிக்கு நீக்கப்படும்.

இதன்படி ,பயணக் கட்டுப்பாடு ஜூன் 23 புதன்கிழமை இரவு 10 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

மேலும் ,பயணத் தடையானது ஜூன் 25 (வெள்ளிக்கிழமை) அதிகாலை 04 மணி வரை தொடரும் என்றும் தெரிவித்தார்.

இக்கால கட்டத்தில் மாகாணங்களுக்கு இடையேயான பிரயாணமும் தடைசெய்யப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் ,நாட்டில் சடுதியாக அதிரத்த கொரோனா பரவல் காரணமாக மே மாதம் 21 முதல் இரு தடவைகள் பயணத்தடை அமுலாக்கப்பட்டது.