பே ஆஃப் பிளெண்டியில் (Bay of Plenty) ஒரு ATV வாகனமும் ஒரு டிராக்டரும் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை 8 மணியளவில் பெங்காரோவாவில் (Paengaroa) உள்ள ஒரு பணியிடத்தில் குறித்த சம்பவம் நிகழ்ந்ததாக பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நபர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.

குறித்த நபரின் மரணம் தொடர்பான விசாரணைகள் நடந்து வருவதாக வொர்க் சேஃப் (Work safe) தெரிவித்துள்ளது.