ஆபரேஷன் ட்ரோஜன் ஷீல்ட்டில் (Operation Trojan Shield) நியூசிலாந்தில் இதுவரை 30 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஆப்ரேஷன் நடவடிக்கையில் போதைப்பொருள் ஏற்றுமதி மற்றும் பிற குற்றங்கள் பற்றி கண்காணிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கைது செய்ய வாரண்ட் உத்தரவு இருந்த 50 வயது நபர் நேற்று இரவு ராக்லானில் (Raglan) கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

அவர் இன்றையதினம் ஹமில்டன் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.