டெங்கு மற்றும் கொவிட் நோய்கள் ஒரே மாதிரியான நோய் அறிகுறிகளை  வெளிப்படுத்தக் கூடியவை என தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதனால் நோய் அறிகுறிகள் தொடர்பில் மிகுந்த அவதானமாக இருக்குமாறும், தேவையற்ற மருந்துகளை பயன்படுத்தாமல் நோய் அறிகுறிகள் தென்படும் முதல் சந்தர்ப்பத்திலேயே வைத்தியர் ஒருவரை சந்தித்து ஆலோசனை பெற்றுக்கொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளிலும் டெங்கு நோய்க்கான சிகிச்சை பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

நடமாட்டக் கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப்பகுதியினுள் வீடு மற்றும் சுற்றுப்புற சூழலை சுத்தம் செய்வதும் மக்களின் பொறுப்பு என வைத்திய நிபுணர் அருண ஜயசேகர தெரிவித்தார்.

எனவே, இந்த பொறுப்புகளை மக்கள் நிறைவேற்ற வேண்டும் எனவும், தமது வீட்டு சுற்றுச்சூழல் தொடர்பில் தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.