தொழில்நுட்பத் துறைகளுக்கு இளைஞர்களை உள்வாங்கும் நோக்கத்துடன் இலங்கையில் ஐந்து நவீன பூங்காக்களை நிர்மாணிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

இதன்படி , காலி, கண்டி மற்றும் குருநாகல் மாவட்டங்களில் இந்த பூங்காக்கள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக நவீன தொழில்நுட்பம் மற்றும் நிறுவன மேம்பாடு இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

மேலும் ,இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் உதவியுடன் காலியில் முதல் நவீன பூங்கா நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.