லாக்டவுன்-க்கு பின்பு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட காரணத்தால் தமிழ்நாட்டில் மதுபான விற்பனை தாறுமாறாக உயர்ந்துள்ளது. முதல் நாளிலேயே சுமார் 164.87 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டு உள்ளது மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. ஒரு பக்கம் கொரோனா எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் மறுபுறம் மதுபானம் விற்பனை அதிகரிப்பது மூலம் மக்கள் கூடுவது அதிகரிக்கும். இதனால் கொரோனா தொற்று எண்ணிக்கையும் அதிகரிக்கும் என மக்கள் கூறுகின்றனர்.