38 மனைவிகள் 89 குழந்தைகளுடன் உலகில் மிகப்பெரிய குடும்பமாக இந்திய மிசோரம் மாநிலத்தில் வாழ்ந்த ஜினா சானா  உடல் நலக்குறைவால் மரணமடைந்துள்ளார்.

உலகிலேயே மிகப்பெரிய குடும்பமாக கருத்தப்பட்ட குடும்பம் மிசோரம் மாநிலத்தில் உள்ள ஜினா சானா என்பவரது குடும்பம். இவருக்கு 38 மனைவிகள், 89 குழந்தைகள் 33 பேரக்குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். அதனால் உலகிலேயே மிக அதிக எண்ணிக்கை நபர் கொண்ட ஒன்றாக வாழும் குடும்பமாக இவரது குடும்பம் தான் இருந்தது.

76 வயதாகும் ஸியோனா சன்னாவின் குடும்பம் 4 அடுக்கு 100 ரூம்கள் கொண்ட வீட்டில் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் நேற்று (ஜூன் 13ம் தேதி) ஜினா சானா உடல் நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார்.

உலக அளவில் புகழ் பெற்ற இந்த குடும்பத்தின் தலைவர் தற்போது மறைந்துள்ளது. பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலகில் பல இடங்களிலிருந்து இவரின் மறைவிற்கு இரங்கல் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.