நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, மீண்டும் டெங்கு நோய் பரவல் அதிகரிக்கும் நிலை உள்ளதாக சுகாதாரப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி ,இந்த மாதத்தின், கடந்த சில தினங்களில் மாத்திரம் 184 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 888 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அந்நிலையில் , வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 80,031 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் ,டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை நாட்டின் பல மாவட்டங்களில் பதிவாகக் கூடிய அச்சுறுத்தல் நிலவுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.