ஆக்லாந்தின் வடக்கு கரையில் (Auckland's North Shore) திருடப்பட்ட 180 அஞ்சல்களை போலீசார் மீட்டுள்ளனர்.

டொர்பே (Torbay), பிரவுன்ஸ் பே (Browns Bay),மற்றும் ரோட்சே பே (Rothesay Bay) பகுதிகளில் அஞ்சல்கள் காணாமல் போனதாக வெளியான தகவல்களுக்குப் பிறகு, ஜூன் 1ஆம் திகதி பிரவுன்ஸ் பே ரோட்டில் (Browns Bay Rd) ஒரு வாகனத்தில் திறக்கப்படாத கடிதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

26 வயது பெண் ஒருவர் குறித்த அஞ்சல் திருட்டை செய்தநிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் ஜூன் 16 ம் திகதி அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.

மீட்கப்பட்ட அஞ்சல்கள் அனைத்தும் சரியான முகவரிகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

இந்நிலையில் தங்களது அஞ்சல் திருடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கும் எவரும் 105 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி போலீஸை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரீன்லேனில் (Greenlan) திருடப்பட்ட அஞ்சல் தொடர்பாக திருட்டு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணை சமீபத்தில் போலீசார் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.