ஆக்லாந்து மனிதர் டென்வர் சான்ஸைக் கொலை செய்த நபர் குறைந்தது 15 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஜெய் லிங்மேனுக்கு இன்று காலை ஆக்லாந்து உயர் நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மூன்று வார விசாரணைக்குப் பிறகு சான்ஸை கொலை செய்த குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2019ஆம் ஆண்டு பெப்ரவரி 24ஆம் திகதி லிங்மேன் சான்ஸை மூன்று முறை தலையில் சுட்டு கொலை செய்துள்ளார்

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டநிலையில் நீதிபதி ஹார்லண்ட் அவருக்கு குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் மற்றும் இரண்டு மாதங்கள் பரோல் வழங்காத ஆயுள் தண்டனை விதித்தார்.

விசாரணையின் தொடக்கத்தில், கோகோயின் மற்றும் எம்.டி.எம்.ஏ உள்ளிட்ட மருந்துகளை வழங்கியது உட்பட மூன்று குற்றச்சாட்டுகளுக்கு லிங்மேன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.