தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டதால் மனமுடைந்த கல்லூரி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் செங்கல்பட்டில் நடந்துள்ளது. மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளத்தில் வெளியிட்டு அவரது தற்கொலைக்கு காரணமான மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.