சைனோபாம் தடுப்பூசியின் 2வது தடுப்பூசியை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளார்களுக்கு, கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ,முதல் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட இடத்திற்கு செல்ல சிரமம் காணப்படும் நபர்களுக்கு இன்றைய தினம் சுகததாஸ விளையாட்டரங்கில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

மேலும் ,மே மாதம் 10 ம் திகதி முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கே, இன்றைய தினம் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.