மும்பை நகரின் மலாட் பகுதியில் இருந்த கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி ,சீரற்ற வானிலையால் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக குறித்த கட்டடம் இடிந்து விழுந்துள்ளது.

அதன்போது ,குறித்த கட்டடத்தில் வசித்து வந்த 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், 8 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்பு படையினர் அறிவித்துள்ளனர்.

மேலும் ,குறித்த 8 பேரும் தொடர்ச்சியாக சிகிச்சைப் பெற்று வருகின்ற நிலையில், இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.