வன்னி மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் காதஸ் மஸ்தானுக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.

அதன்படி ,கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் அவருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, அவர் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

.மேலும்,,எவ்வாறாயினும், நாளை அவருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.