ஆக்லாந்தின் வைஹேக் தீவில் கண்டெடுக்கப்பட்ட சடலம் காணமல்போன படகோட்டி போடி எர்னோ பெடோ என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

73 வயதான அவர் இரண்டு வாரங்களுக்கு முன்பு காணாமல் போனார்.

அவர் காணாமல்போன நிலையில் அவரது படகு மே 31 அன்று மோட்டுதாபு தீவுக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் ஹவுராகி வளைகுடாவில் உள்ள தீவின் தொலைதூர கடற்கரையில் அவரது உடல் திங்கட்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது சடலம் காணமல்போன படகோட்டி போடி எர்னோ பெடோ என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பெடோவின் மனைவி மற்றும் மகள்கள் தேடலுக்கு உதவிய அனைவருக்கும் மிகவும் நன்றி தெரிவிப்பதாகக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.