கிறிஸ்ட்சர்ச் சந்திப்பில் கடந்த வெள்ளிக்கிழமை காலை விபத்தில் இறந்த ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அவரது இறுதி சடங்கிற்காக நிதி திரட்டல் தொடங்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் இறந்தவர் ஆண்ட்ரே அகஸ்டோ பெர்னாண்டஸ்,வயது 35 மற்றும் இவர் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர்.

பெர்னாண்டஸ் கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஒரு கதவு நிறுவல் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

இறுதிச் செலவுகளுக்காகவும், பிரேசிலில் சாவோ பாலோ நகரில் உள்ள பெர்னாண்டஸை அவரது குடும்பத்தினருக்கு திருப்பித் தரவும் ஒரு கிவாலிட்டில் என்ற நிதி திரட்டும் நிறுவனம் நான்கு நாட்களில், 11,655 டொலர் நிதி திரட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பெர்னாண்டஸின் இறுதிச்சடங்கிற்காகவும் அவரது குடும்பத்தின் வறுமைச்சுமையை குறைக்கும் வகையிலும் இந்த நிதி திரட்டல் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.