இந்த வாரத்திற்கான நாடாளுமன்ற அமர்வை இன்று (08) ஒரு நாள் மாத்திரம் நடத்துவதற்கு நேற்று (07) இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், நேற்று (07) நாடாளுமன்றில் கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று (08) முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 4.30 வரை நாடாளுமன்ற அமர்வை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.