ஜனாதிபதி அலுவலகத்தின் இணையத்தளம் உட்பட சில அரச இணையத்தளங்களில் பாரிய சைபர் தாக்குதல் இடம்பெற்றதாகக் கூறி பொய்யான தகவல்களை பரப்பிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனடிப்படையில், சந்தேக நபரினால் சமூக வலைத்தளங்களில் சைபர் தாக்குதல் இடம்பெற்றதாக கூறி பகிரப்பட்ட பொய்யான தகவல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்று (07) மாலை குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர், பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரைணகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

.