தனியார் வங்கிகள் இன்று முதல் சில தினங்களுக்கு மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தனியார் வங்கிகள் தமது சமூக வலைத்தளங்களில் அறிவித்துள்ளன.

தனிமைப்படுத்தல் சட்டம் மற்றும் பயணக் கட்டுப்பாடு ஆகியவற்றை கருத்திற் கொண்டு இந்த தீர்மானத்தை வங்கிகள் எட்டியுள்ளதாக அறிய முடிகின்றது,

தன்னியக்க இயந்திரங்கள், இலத்திரனியல் வங்கி சேவைகளை பயன்படுத்தி, வங்கி சேவைகளை நாளை முதல் முன்னெடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.