உலகிலேயே முதன்முறையாக 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட சீனா அனுமதி அளித்துள்ளது.

அதன்படி ,சீனாவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு சினோவாக் பயோடெக்கின் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவரும் நிலையில், குழந்தைகளுக்கும் அந்த தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்த அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.

மேலும் ,ஆரம்ப கட்ட மருத்துவ பரிசோதனையில் தடுப்பூசி குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தியை தூண்டுவதுடன், பாதகமான விளைவுகளை ஏற்படுத்தவில்லை என மருத்துவ நிபுணர்கள் விளக்கமளித்துள்ளனர்.