சென்னை வண்டலூர் உயிரியியல் பூங்காவில் கொரோனா அறிகுறி இருந்த பெண் சிங்கம் ஒன்று உயிரிழந்தது.

மேலும் 8 சிங்களுக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவற்றில் இரண்டின் நிலை கவலைக்கிடமாக உள்ளதென்றும் உயிரியியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், வண்டலூர் உயிரியியல் பூங்காவுக்கு நேரடியாக சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் பாதிக்கப்படுள்ள விலங்களுக்கு கொடுக்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஊழியர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.