தாய் ஏற்கெனவே இறந்த நிலையில் கொரோனாவால் தந்தையும் உயிரிழந்ததை அடுத்து சிறுவர்கள் படிக்க முடியாமல் தவிக்கும் சம்பவம் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரம் கொண்டரசம்பாளையம் கே.கே. நகர் பகுதியில் வசித்து வருபவர் செந்தில்குமார் (45). கார் டிரைவரான இவருக்கு கார்த்திகா என்ற மனைவியும், தரணீஷ் (13), ரித்விக் (10) என்ற இரு மகன்களும் உள்ளனர்.ரித்விக் பிறந்தபோதே உடல்நலக் குறைவினால் கார்த்திகா இறந்துவிட்டார்.

இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொரோனா தாக்குதலுக்குள்ளான செந்தில்குமார் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கொரோனாவால் தந்தை பலியானதற்கு நிவாரண தொகை மத்திய ,மாநில அரசுகள் வழங்குவதால் அந்த நிவாரணத் தொகையை இம் மாணவர்களுக்கும் கிடைக்க அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகாரிகள் இவ்விரு மாணவர்களின் கோரிக்கையை பரிசீலித்து நிவாரணத் தொகையும் கல்வியைத் தொடரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.