வண்டலூர் பூங்காவில், கடந்த வாரம் ஒரு சிங்கத்துக்கு உடம்பு சரியில்லாமல் போயிருந்தது.. ஒருவேளை தொற்று பாதிப்பு இருக்குமோ என்று கால்நடை மருத்துவர்கள் சந்தேகித்தனர். இந்நிலையில், சிங்கம் பரிதாபமாக சுருண்டு உயிரிழந்துள்ளது. இதையடுத்து, சிங்கத்தின் சடலத்தின் மாதிரிகளை, போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்களுக்கான நிறுவனத்திற்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டது.