நாடளாவிய ரீதியில் உள்ள சதொச விற்பனை நிலையங்கள் இன்று (03) முதல் தொடர்ந்து நாளந்தம் திறக்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு சதொச விற்பனை நிலையங்கள் அத்தியவசிய தேவையாக வர்த்தமானி அநிவித்தல் வௌியிடப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் நடமாடும் வியாபாரிகளுக்கு சதொச ஊடாக குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்து விற்பனை செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.