மட்டக்கப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்று சுகாதார ஊழியர்கள் 15 கோரிக்கைகளை முன்வைத்து தீர்வுகள் தாமதம். பிரச்சனைகள் முடிவற்றவை ஒருங்கிணைந்த போராட்டத்துக்கு ஒன்றிணைவோம் என்ற தலைப்பில் இன்று வியாழக்கிழமை வைத்தியசாலைக்கு முன்னால் பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

சுகாதார துறையிலுள்ள 6 தொழிற்சங்கங்கள் ஒன்றினைந்து சுகாதார தொழிற்சங்க ஓன்றிணைப்பு நாடளாவிய ரீதியில் இந்த பணிபுறக்கணிப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதனையடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள் இன்று காலை 7 மணி தொடக்கம் 12 மணிவரை தமது கடமைகளில் இருந்து வெளியேறி 15 கோரிக்கையினை முன்வைத்து வைத்தியசாலை நிர்வாக பணிமனைக்கு முன்னால் ஒன்று கூடி தமது எதிர்ப்பை தெரிவித்து பணிபஷகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை இந்த சுகாதார ஊழியர்களின் பணிபஷகரிப்பு பகல் 12 மணிக்கு முடிவுற்றதும் அதனை தொடர்ந்து தாதியர்கள் இந்த பணிபஷகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.