கரும்பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் மியூக்கோர்மைகோசிஸ் எனும் கரும்பூஞ்சை நோய் தொற்றால் பாதிப்புக்கு ஆளாகின்றனர். கரும்பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண் எரிச்சல், கண் சிவத்தல், கண்களுக்கு கீழ் வலி, பார்வை குறைபாடு உள்ளிட்டவை கரும்பூஞ்சை தொற்றுக்கு முக்கிய அறிகுறியாகும்.