சீனாவில் பறவைகளுக்கு மத்தியில் பரவி வந்த பறவைக் காய்ச்சல் தொற்று (H10N3) தற்போது மனிதர்களுக்கு முதல்முறையாக பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சீனாவின் கிழக்கு ஜியாங்ஷு மாகாணத்தில் மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் வைரஸ் தொற்றியுள்ளதாக சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

எனினும் பறவைக் காய்ச்சல் வைரஸ்கள் அவ்வப்போது மனிதர்களுக்கு பரவி வருவதாகவும், இதனால் ஆபத்து இல்லை எனவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன் H10N3 பறவைக் காய்ச்சல் வைரஸ் மனிதர்களுக்கு பரவியதாக உலகில் எங்குமே தகவல் வரவில்லை. முதல்முறையாக சீனாவில் பரவியுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வைரஸ் அதி வேகத்தில் பரவக்கூடிய வைரஸ் இல்லை. மேலும், பறவைகள் மத்தியிலேயே பாதிப்பு குறைவானதுதான் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.