பாகிஸ்தான் நாட்டில் பஞ்சாப் மாகாணத்தில் சீரற்ற வானிலை காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்துள்ளது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பலர் மழையால் ஏற்பட்ட அசம்பாவிதங்களில் சிக்கி உயிரிழந்து உள்ளனர்.

இந்நிலையில் பஞ்சாப் மாகாணத்தின் ஒகாரா நகரில் தாரிக் அபாத் என்ற பகுதியில் மேற்கூரை ஒன்று இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மீட்பு குழுவினர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர்.

மேலும் பஞ்சாப் மாகாணத்தின் ஒகாரா மாவட்டத்தில் ஹஜ்ரா ஷா முகீம் என்ற பகுதியில் நடந்து சென்றவர் மீது மழையால் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானானதுடன் மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்து உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.