தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அமீரகத் தொழிலதிபர் சாகுல் அமீது என்பவர் தமிழக அரசுக்கு 330 ஆக்சிஜன் உருளைகளை வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் வைக்க தமிழக அரசு மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மேலும், கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களை அதிலிருந்து மீட்டெடுக்கவும் சுகாதாரத்துறை பம்பரமாக சுழன்று வருகிறது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பல மாநிலங்களில் உயிரிழப்புகள் அதிகரித்த நிலையில், ஆட்சிக்கு வந்த முதல் நாள் முதலே ஆக்சிஜன் உற்பத்தி விவகாரத்தில் முழு கவனம் செலுத்த தொடங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்.