2017ஆம் ஆண்டு முதல் அடிப்படை வாதத்தை பரப்பியதோடு ஏப்ரல் குண்டு வெடிப்பு சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானுக்கு பாதுகாப்பு வழங்கிய குற்றச்சாட்டில் திருமண பதிவாளர் ஒருவர் ஒலுவில் பகுதியில் வைத்து பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இதன்படி ,கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பயங்கரவாத விசாரணை பிரிவில் வைத்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதிகாவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.