சீனாவின்  20 இலட்சம் Sinopharm தடுப்பூசிகள் அடுத்த மாதம் நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

முதற்கட்டமாக ஜூன் மாதம் 6 ஆம் திகதியளவில் 10 இலட்சம் Sinopharm தடுப்பூசிகளை நாட்டிற்கு வழங்க முடியும் என சீனா தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.அதனையடுத்து இரண்டு வாரங்களின் பின்னர் மீதமுள்ள 10 இலட்சம் தடுப்பூசிகளும் நாட்டிற்கு கிடைக்கவுள்ளன.