பிரேசில் நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரேசிலில் நாட்டின் செர்கிபே மாநிலத்தில் அரகாஜு என்ற நகரில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நெஸ்டர் பைவா என்ற மருத்துவமனையில் திடீரென நேற்று தீப்பற்றி எரிந்துள்ளது.

இந்த சம்பவத்தில் பலர் சிக்கி கொண்டதுடன் அவர்களில் 77 வயது மூதாட்டி உள்பட 4 பேர் உயிரிழந்து உள்ளனர். 

சம்பவம் நடந்தபோது, மருத்துவமனையில் 60 நோயாளிகள் இருந்து உள்ளனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.