தம்புள்ளை – கலேவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திக்கல பகுதியில்தண்ணீர் நிரப்பப்பட்ட பானைக்குள் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (28) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குழந்தை தனது வீட்டின் பின்னால் தண்ணீர் நிரப்பப்பட்ட பானையில் இருந்து தண்ணீர் எடுக்க முயன்ற வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக தம்புள்ளை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.