அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் படகு கவிழ்ந்ததில் 2 பேர் பலியானதுடன் 10 பேர் மாயமாகியுள்ளனர்.

அமெரிக்காவின் தென்கிழக்கே அமைந்த புளோரிடா மாகாணத்தில் கீ வெஸ்ட் பகுதியருகே சென்று கொண்டிருந்த குறித்த படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் நீரில் மூழ்கி 2 பேர் பலியானார்கள்.மேலும் 8 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.