நாடு முழுவதும் இன்றும், நாளையும் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை சகல அஞ்சல் அலுவலகங்களும், உப அஞ்சல் அலுவலகங்களும் திறக்கப்படுமென்று அஞ்சல்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

மே மாதத்துக்கான ஓய்வூதியம், விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு, முதியோர் கொடுப்பனவு மற்றும் பொதுசன மாதாந்த கொடுப்பனவுகள் என்பவற்றை வழங்குவதற்காக மாத்திரம் அஞ்சல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் தங்களுடைய ஓய்வூதிய அடையாள அட்டை, விவசாயம், மீனவர் ஓய்வூதிய அடையாள அட்டை, முதியோர் மற்றும் பொதுசன கொடுப்பனவுகளுக்காக வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி அஞ்சல் அலுவலகங்களுக்கு பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.