கொழும்பு கொள்ளுபிட்டி பிரதேசத்தில் தனியார் வைத்தியசாலையொன்றில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளர் பிடிபட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்ட பின்னர், கடந்த 25 ஆம் திகதி குறித்த வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய குறித்த சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.