கொரோனா வைரஸ் ​தொற்றுக்கு உள்ளாகி, தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்தவர், அந்த வைத்தியசாலையில் இருந்து தப்பியோடிவிட்டார்.

அம்பாறையைச் சேர்ந்த நபரே இவ்வாறு, நேற்று மாலை தப்பியோடிவிட்டார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

மேலும் ,கொரோனா ​தொற்றுக்கு உள்ளான மொஹமட் ரிகாஷ் என்பவரே இவ்வாறு தப்பியோடிவிட்டார். அவர் தொடர்பிலான தகவல்கள் கிடைத்தால் உடனடியாக அறிவிக்குமாறும் பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.